அந்த இளம் வீர்ரை white ball கிரிக்கெட்டில் ஆரம்ப வீர்ராக்க வேண்டும் -இன்னுமொரு கில்கிறிஸ்ட் உருவாகுவார்-கவாஸ்கர்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ரிஷப் பான்ட் வெள்ளை பந்து வடிவத்தில் இந்தியாவுக்காக ஆரம்ப வீரராக விளையாட வேண்டும்  என விரும்புகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு ஆடம் கில்கிறிஸ்ட் செய்தது போல் ரிஷப் பண்ட் செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் விரும்புகிறார்.

White ball கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடம் கில்கிறிஸ்ட் செய்ததைப் பாருங்கள். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர்.6 அல்லது 7-ல் பேட் செய்தார், ஆனால் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் தொடக்கத்தில் அவர் எதிரணிகளுக்கு அழிவை ஏற்படுத்தினார்.

ஒருவேளை ரிஷப் பந்த் போன்ற ஒருவர் சமமாக அதேவித தாக்குதலை ஏற்படுத்தலாம், மேலும் அவர் விளையாட இன்னும் பல ஓவர்கள் கிடைக்கும்.

நாங்கள் அவரை ஒரு ஃபினிஷராகப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அவர் அங்கு வந்து, பந்தை அடிக்க ஆரம்பித்து உடனே வெளியேறுகிறார்.

இங்கு, முதல் பந்திலேயே அதிரடி செய்ய வேண்டியதில்லை என்ற விழிப்புணர்வு அவருக்கு இருக்கும். வேகத்திற்கும் இயக்கத்திற்கும் பழகுவதற்கு அவருக்கு சில நேரம் இருக்கும்.

ஆகவே மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அவர் ஆரம்ப வீரராக வருவதாக இருந்தால் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, கில்கிறிஸ்ட் செய்த அதே வேலையை பான்ட் செய்வார் எனவும் கவாஸ்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதே மாதிரியான ஒரு கருத்தை அண்மையில் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜஃபாரும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

2023 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு பின்னர் ஷிகர் தவானுக்கு அணியில் தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்கவில்லையாயின் நிச்சயமாக அந்த இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் பான்டுக்கு உருவாகும் என்று கருதப்படுகிறது.

 

YouTube தளத்துக்கு செல்லுங்கள் ?

புதிய Test தரவரிசை ?