அபுதாபி T10 லீக் இறுதிப் போட்டியில் அசத்திய இலங்கையர்கள்…!

அபுதாபியில் இன்று நிறைவுக்கு வந்த 10 ஓவர்கள் கொண்டதான அபுதாபி T10 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை வீரர்கள் இருவர் அபார திறமையை வெளிப்படுத்தினர்.

இலங்கையின் LPL போட்டிகளில் காலி அணிக்காக விளையாடிய தனஞ்செய லக்‌ஷான் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோன்று ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடிய மகேஷ் தீக்ஷன எனும் இளம் வீரர் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இலங்கை வீரர்கள் இருவரும் இன்றைய போட்டியில் மிகச்சிறப்பாக அசத்தியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் இலங்கையின் இளம் வீரர்கள் இருவரும் விளையாடிய நிக்கலஸ் பூரான் தலைமையிலான நோர்த்தேர்ன் வோரியேரஸ் அணி 8 விக்கட்களால் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது 3 விக்கட்களை கைப்பற்றிய மகேஷ் தீக்ஷனவிக்கு கிடைத்தது.