ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை வலைப்பந்து அணி…!

ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இலங்கை அணி எதிர்கொண்ட போட்டி இன்று இடம்பெற்றது. இன்றைய போட்டியில் இலங்கை அணி ஹொங்கொங் அணியை எதிர்த்து களமிறங்கியது.

சிங்கப்பூரில் நடைபெற்ற இந்த வருடப் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணிக்கு எதிராக இலங்கை மகளிர் வீராங்கனைகள் சிறப்பான வெற்றியைப் பெற முடிந்தது. தொடக்கம் முதலே ஆட்டத்தை கைப்பற்றிய இலங்கை வீரர்கள் முதல் பாதியில் 17- 7 என்ற புள்ளிகளுடன் முன்னிலை பெற்றனர்.

இரண்டாவது மற்றும் மூன்றாம் பாதிகளில் இலங்கை பெண்கள் தலா 15 புள்ளிகளைப் பெற முடிந்தது, அதே சமயம் ஹொங்கொங் பெண்கள் அந்த இரண்டு பாதிகளிலும் தலா 09 புள்ளிகளைப் பெற்றனர்.

ஆட்டத்தின் கடைசி பாதியில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது, அந்த பாதியிலும் இலங்கை பெண்கள் 20- 18 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றனர்.

இதன் மூலம் முதல் அரையிறுதிப் போட்டியில் 67- 43 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி தோல்வியின்றி தொடரை தக்க வைத்துக் கொண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடிந்தது. போட்டியின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

கடந்த முறை ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணியினர் ஹொங்கொங் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 2023 உலகக்கிண்ண வலைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

விளையாட்டு ரசிகர்களைப் பொறுத்தவரை நாளையநாள் கிரக்கெட்டுக்கு மட்டுமல்ல வலைப்பந்து ரசிகர்களுக்கும் சிறப்புக்குரிய நாளெனலாம்.

நாளைய நாளில் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியிலும் இலங்கை அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.