தோத்தாலும் பரவால்ல’ என இந்த சீசனில் முழுதாக பார்க்க வைத்த சென்னையின் முதல் மேட்ச். Arguably the best match of the season.
இரண்டாம் இன்னிங்ஸின் முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை விடாமல் தொடர்ந்த அந்த வேட்கை தான் OG CSK. எப்போதும் விட்டுவிடாத அந்த வெறி பெற்றுக்கொடுத்தது தான் ஐந்து ஐ.பி.எல் கோப்பைகளும் கோடிக்கணக்கான ரசிகர்களும். அந்த பழைய சென்னையையும் அதன் அடுத்தடுத்த சீசன்களுக்கான Glimpse ஐயும் காட்டிச் சென்றிருக்கிறது இந்த மேட்ச்.
புவனேஷ்குமார் குமார் போட்ட நான்காவது ஓவரில் ஆயுஷ் மாத்ரே வெளுக்கத் துவங்கியது, ஜடேஜா உள்ளே வந்து விமர்சனங்களை உடைத்து வெறித்தனமான ஆட்டமொன்றை ஆடியது, இருவரும் இணைந்து தண்ணி காட்டிய அட்டகாசமான பார்ட்னர்ஷிப், தோனி தைரியமாக சீக்கிரமே உள்ளே வந்தது என இந்த ஆட்டம் முழுக்க முழுக்க சிஎஸ்கே தில்லாக, இன்டென்ட்டுடன் ஆடிய ஆட்டம்.
டிவால்ட் ப்ரீவிஸ்க்கு கொடுக்கப்பட்ட அந்த மிகத் தவறான LBW தான் ஆட்டத்தின் திருப்புமுனை. அதற்கு ரிவ்யூ எடுக்க முடியாமல் போனதும் ஆட்டத்தின் முடிவும் Directly Proportional என்று சொல்வேன். இருந்தும் கடைசி வரை இறுக்கிப் பிடித்து ஆட்டத்தை கொண்டு சென்றன இரண்டு அணிகளும். மற்ற ஆட்டங்கள் போல் இல்லாமல் விளையாட்டின் மிகச்சிறிய கணக்கீடுகளிலேயே தோற்றிருக்கிறது சென்னை.
ஆனால் மற்ற தோல்விகளைப் போல் இந்த தோல்வி வருத்தம் தரவில்லை. கடுப்பேற்றவில்லை. முக்கியமாக இது ஒரு தோல்வியாகவே ஃபீல் ஆகவில்லை. ஒரு நிறைவான, சந்தோஷமான உணர்வுதான் எழுகிறது. ஏலத்தில், ப்ளேயிங் லெவனில், ஆட்டங்களில் செய்த தவறுகளில் இருந்து மீண்டு அடுத்த வருடம் பழைய சென்னையாக CSK எழுந்து வரும் என்ற நம்பிக்கையை கொடுத்தது இந்தப் போட்டி.
சென்னை தன் விஸ்வாசமான ரசிகர்களுக்கு தரவேண்டியது வெற்றியை அல்ல. வெற்றியை நோக்கிய வீறு கொண்ட போராட்டத்தை தான். அப்படியொரு கம்பீரமான போராட்டத்தை தன் ரசிகர்களுக்கு இன்று பரிசளித்தது சென்னை. இது போதும், அடுத்த ஆண்டு இதே அன்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசிலடிக்க காத்திருக்க.
இப்படி ஆடித் தோத்தா பரவால்ல. இப்படி ஆடுனா போதும்!