இலங்கையின் ஆசியக் கிண்ண அணியில் மாற்றம்- இருவர் புதிதாக சேர்ப்பு…!

வேகப்பந்து வீச்சாளர்களான பினுர பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் காயம் காரணமாக 2022 ஆசிய கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்விரு வீரர்களும், விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் அறிவிக்கப்பட்ட ஆசியக் கிண்ண டி20 தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்படுவார்கள்.

இதற்கிடையில், இலங்கையின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர தனது கணுக்கால் காயத்திலிருந்து இன்னும் குணமடையாததால், ஆசிய கோப்பையில் விளையாடுவது இன்னும் சந்தேகமாக உள்ளது.