இலங்கையில் ராணுவ செயல்பாடு – அமெரிக்க தூதரக அறிக்கை..!

இலங்கையில் ராணுவ செயல்பாடு – அமெரிக்க தூதரக அறிக்கை..!

இலங்கையில் திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை இராணுவம் அனுப்பப்பட்டமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.

அமைதியான எதிர்ப்பாளர்கள் இராணுவப் படை அல்லது சிவிலியன் பிரிவுகளின் தரப்பில் வன்முறை அல்லது மிரட்டலுக்கு ஆளாகக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார்.

“இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கிறோம்,” என்றார்.

வன்முறைச் செயல்களைத் தூண்டும் மற்றும் ஈடுபடும் எவரையும் முழு விசாரணை, கைது மற்றும் வழக்குத் தொடர அமெரிக்கா அழைப்பு விடுக்கிறது என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“நாங்கள் துருப்புக்களின் நிலைப்பாட்டை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், இது எங்களுக்கு கவலை அளிக்கிறது. பிரதமரின் ராஜினாமாவுக்குப் பிறகு இலங்கையில் நிலவும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் முன்னேற்றங்களையும் நாங்கள் அவதானிக்கிறோம், ”என்று அவர் கூறினார்.

நெட் பிரைஸ் மேலும் கூறுகையில், இலங்கையில் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான தீர்வுகளை கண்டறிந்து அமுல்படுத்த ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கங்களையும் அரசியல் தலைவர்களையும் துரிதமாக செயற்படுமாறு அமெரிக்கா கேட்டுக்கொள்கிறது.

மின்சாரம், உணவு, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை மக்களின் அதிருப்தி மற்றும் நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்த அவர்களின் கவலைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்க ஆதரவாளர்களைக் குறிவைத்து பரவலான தீவைப்பு மற்றும் கும்பல் வன்முறையைக் கட்டுப்படுத்த, மக்கள் அல்லது சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எவரையும் சுடுமாறு பாதுகாப்புப் படையினருக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டதையடுத்து, செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கவலை தெரிவித்தது.

Previous articleதற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர தேசிய மக்கள் சக்தி (JVP அணி) குறுகிய கால முன்மொழிவுகள்
Next articleமஹிந்த இருப்பது எங்கே – பாதுகாப்பு செயலாளர் ஊடகங்களுக்கு விளக்கம்…!