இலங்கை அணியின் முக்கிய வீரர் திடீர் ஓய்வு- இந்திய தொடருடன் விடைபெறுகிறார்…!

இலங்கை அணியின் முக்கிய வீரர் திடீர் ஓய்வு- இந்திய தொடருடன் விடைபெறுகிறார்…!

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்திய, இலங்கை சுற்றுப்பயணத்தை அடுத்து அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் சுரங்கா லக்மால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

“எனது தொழில் வாழ்க்கையை வடிவமைத்த மற்றும் எனது தனிப்பட்ட வளர்ச்சியை செழுமைப்படுத்திய வாரியத்துடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதால், இந்த வியக்கத்தக்க வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும், எனது தாய் மண்ணின் பெருமையை மீண்டும் கொண்டு வர என் மீது நம்பிக்கை வைத்ததற்கும் நான் இலங்கை கிரிக்கெட்டுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்” என்று லக்மால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் சமர்ப்பித்த ஓய்வு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி மேலாளர்கள், துணை ஊழியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் மற்ற அனைத்து ஆதரவாளர்களுக்கும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று லக்மால் மேலும் கூறினார்.

சுரங்கா லக்மால் அனைத்து சர்வதேச வடிவங்களிலும் இலங்கைக்காக விளையாடினார், தேசிய அணியின் முன்னேற்றத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கினார்.

“லக்மாலின் எதிர்கால முயற்சிகளுக்கு சிறந்ததாக அமைய வாழ்த்துவதற்கு நாங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம், மேலும் இந்திய, தேர்வுக்குழு அவரை சுற்றுப்பயணத்திற்கு பரிசீலித்தால், இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அவர் நாட்டிற்காகச் செயல்படுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம், ” என்று இலங்கை கிரிக்கெட்டின் CEO ஆஷ்லி டி சில்வா கூறினார்.

34 வயதான லக்மால் 68 டெஸ்ட் போட்டிகளில் 168 விக்கெட்டுக்களையும், 86 ஒருநாள் போட்டிகளில் 109 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

Previous article2 கோடிக்கு IPL ஏலத்தில் குதிக்கும் 17 இந்திய வீரர்கள் விபரம்..!
Next articleதிசாரா பெரேரா தேர்ந்தெடுத்துள்ள சிறந்த டி20 அணியில் 4 இந்திய வீரர்களுக்கு இடம் – ஒரு இலங்கை வீரர் கூட இல்லை..!