இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின…!

கொரோனா பரிசோதனை முடிவுகளில் இலங்கை வீரர்கள் எவருக்கும் கொரோனா இல்லை என்பது முடிவானதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி நாளை பயிற்சியை மீண்டும் தொடங்கவுள்ளது.

 SLC மருத்துவக் குழுத் தலைவர் பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா, இலங்கை வீரர்களுக்கு இப்போது  பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறது. நாங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க அனுமதி வழங்கியுள்ளோம், அவர்கள் இன்று ஜிம் அமர்வுகளுடன் பயிற்சியை தொடங்குவார்கள், நாளை மைதானத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்” என்று அர்ஜூன டி சில்வா கூறினார்.

ஜூலை 13 ஆம் தேதி துவங்கவிருந்த இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்த இலங்கை அணியின் இரண்டு ஊழியர்கள் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

ஒருநாள் தொடர் இப்போது ஜூலை 18 ஆம் தேதி தொடங்கும், அதைத் தொடர்ந்து ஜூலை 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் நடைபெறும்.

இருப்பினும்,கொரோனா தொற்றுக்கு உள்ளான துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவரின் நேரடி தொடர்புகள் உள்ள அனைவருமே ஜூலை 14 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் இலங்கை அணி பயிற்சி ஊழியர்கள் இல்லாமல் பயிற்சி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.