ஐபிஎல் 2022: ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் முசரபானி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைகிறார்.

ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானி, வரவிருக்கும் சீசனுக்கான ஐபிஎல் தொடரில் அறிமுக வீரர்களான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸில் (எல்எஸ்ஜி) அணியில் சேர உள்ளார்.

25 வயதான வேகப்பந்து வீச்சாளர் தனது தேசிய அணிக்காக ஆறு டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 21 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் அல்லது உரிமையாளரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவித்தல்கள் எதுவும் இல்லை, ஆயினும் ஆன்டிகுவாவில் நடந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்டில் முழங்கை காயத்தால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக முசரபானி லக்னோ அணியில் இணைவார் என்பதை அறியமுடிகிறது.

8 என்ற எகானமி விகிதத்தில் 21 டி20 சர்வதேச போட்டிகளிலிருந்து 25 விக்கெட்டுகளை வீழ்த்திய முசுர்பானி, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லில் விளையாடும் முதல் ஜிம்பாப்வே வீரராகிறார்.

முன்னாள் ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் ஐபிஎல் 2014 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஒரு பகுதியாக இருந்தார், ஆனால் ஆரஞ்சு ஆர்மிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை. ஐபிஎல் 2015க்கு முன்னதாக அவர் விடுவிக்கப்பட்டார்.

ரே பிரைஸ் (மும்பை இந்தியன்ஸ்) மற்றும் டடெண்டா தைபு (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற மற்ற ஜிம்பாப்வே வீரர்கள்.

வூட்டுக்குப் பதிலாக வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமதுவை LSG ஒப்பந்தம் செய்யும் என்று முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் வங்கதேச கிரிக்கெட் சபை தேசிய பொறுப்புகள் காரணமாக தடையில்லாச் சான்றிதழை வழங்க (NOC -No objection certificate)மறுத்துவிட்டது.