ஓமான் அணியுடனான T20 தொடரை அசால்டாக கைப்பற்றியது இலங்கை அணி..!

ஓமான் அணியுடனான T20 தொடரை அசால்டாக கைப்பற்றியது இலங்கை அணி..!

ஓமானுக்கான கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் ஓமான் அணியுடனான இரண்டு நட்பு ரீதியிலான T20 போட்டிகள் கொண்ட தொடரை இன்று நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது .

முதல் போட்டியில் 19 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி, இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

மிகச்சிறப்பாக 160 எனும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து போட்டியில் வெற்றி பெற்றது, 6-வது விக்கெட்டுக்காக ரோயல் கல்லூரியின் முன்னாள் தலைவர்களான பானுக்க ராஜபக்ச மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோர் 42 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு கட்டத்தில் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்து தடுமாறிய இலங்கை அணி, 6 விக்கெட்டுக்கு 74 ஓட்டங்கள் இணைப்பாட்டம் புரிய  இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முதலாவது போட்டியில் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை 162 ஓட்டங்களை அதே 4 விக்கட்டுக்களை இழந்து 5 வது விக்கட்டில் 111 ஓட்டங்கள் இணைப்பாட்டம்  புரிந்தது.

இன்று இரண்டாவது போட்டியிலும் தடுமாறினாலும் நம்பகமான இணைப்பாட்டம் இலங்கையை காப்பாற்றியிருக்கின்றது. மொத்தத்தில் இலங்கை வீரர்களுக்கு உலகக்கிண்ண போட்டிகளுக்கு முன்னதாக ஒரு மிகச்சிறந்த பயிற்சிக்களம் ஓமான் அணியுடனான தொடரில் கிடைத்து இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

சாமிக கருணாரத்ன மற்றும் பானுக ராஜபக்ச ஆகியோர் ஆட்டமிழக்காது இருவரும் தலா 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

லஹிரு குமார, சாமிக கருணாரத்ன ஆகியோர 2  விக்கெட்டுகளையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்தியாவின் உலகக்கிண்ண அணிக்குள் நுழைகிறார் உம்ரன் மாலிக்- அடித்தது அதிர்ஷ்டம்..!
Next articleஓமான் தொடருக்கு பின்னர் இலங்கை உலகக்கிண்ண அணியில் வரும் நான்கு வீரர்கள்- மீண்டும் அணியில் வரும் அதிரடி மாற்றம்..