சாம்பியன் லீக் கிண்ணம் வென்றது பார்சிலோனா -வரலாற்றில் மகத்தான சாதனை ..!

கால்பந்து ரசிகர்களின் பெரு விருப்புக்குரிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய இறுதி போட்டியில் பார்சிலோனா மகளிர் அணி சாம்பியன் மகுடம் சூடிக்கொண்டது.

செல்சி மகளிர் அணிக்கெதிரான நேற்றைய இறுதி போட்டியில் பார்சிலோனா மகளிர் அணி 4-0 என்று அசத்தல் வெற்றி பெற்றது.

போட்டி ஆரம்பித்து முதலாவது நிமிடத்திலேயே செல்சி அணி வீராங்கனையாலேயே Own goal அடிப்படையில் முதல் கோல் பார்சிலோனாவுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து முதல் பாதி நிறைவுக்கு வருவதற்குள்ளேயே பார்சிலோனா மகளிர் அணி 4 கோல்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது.

 

 

 

 

 

 

இறுதியில் 4-0  எனும் அடிப்படையில் பார்சிலோனா மகளிர் அணி சாம்பியன் லீக் மகுடத்தை தனதாக்கியது, இதன் மூலமாக சாம்பியன் லீக் வரலாற்றிலேயே ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலும் சாம்பியன் மகுடத்தை சூடிய ஒரே அணியாக பார்சிலோனா அணி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Previous articleஆஸ்திரேலியாவை சென்றடைந்தனர் ஐபிஎல் குழாத்தினர்…!
Next articleநேற்றைய கால்பந்து போட்டிகளின் முழமையான விபரம்…!