டி20-யில் எதிர் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவர்- இந்திய வீரரை பாராட்டிய சங்கா

20 ஓவர் போட்டிகளில் சிறந்த வீரர்களில் சஞ்சு சாம்சனும் ஒருவர் என இலங்கை கிரிகேட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அவர் செயற்படுகின்றார்.
இந்த நிலையிலேயே, தனது அணியின் தலைவர் சாம்சனை பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக சங்கக்கார கூறியதாவது:

“சஞ்சு சாம்சன் சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர் ஆவார். அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் 20 ஓவர் போட்டிக்கு சிறந்த வீரர் ஆவார்.

பதவியில் மேம்பட்டு வருகிறார். அவர் ஒரு அற்புதமான வீரர். அபாரமான பேட்ஸ்மேன். எதிர் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர். மேட்ச் வின்னர் ஆவார். ஒரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேனுக்கு உரிய அனைத்து திறமைகளும் அவரிடம் இருக்கிறது. அவர் ஒரு கேப்டனாக தனக்கு இன்னும் எல்லாம் தெரியாது என்று ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறார்.இயற்கையாகவே சாம்சனுக்கு தலைமைக்கான குணங்கள் இருக்கின்றன. அவர் சிறந்த கேப்டனாக ஜொலிப்பார்”