டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் ரத்தாகுமா- ஜப்பானில் அவசரகால நிலைமை பிரகடனம்..!
கடந்த ஆண்டு கொரோனா அச்சநிலைமை காரணமாக பிற்போடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் ரத்தாகுமா எனும் கேள்வி பரவலாக எழுந்திருக்கின்றது.
ஆனாலும் டோக்கியோவில் அவசரகால நிலை பிரகடன படுத்தப்பட்டாலும் திட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டது.
இந்நிலையில் டோக்கியோவில் நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இடைநிறுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
எதிர்வரும் 23 ம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோ ஆரம்பமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.