தினேஷ் கார்த்திக்கின் தலைமைத்துவத்திற்கு புகழாரம்

இந்தியாவில் நேற்று நிறைவுக்கு வந்த சாயத் முஷ்டாக் அலி இருபது-20 தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி கிண்ணம் வென்றது.

14 ஆண்டுகளுக்கு பின்னர் தினேஷ் கார்த்திக் தலைமையில் இன்னுமொரு கிண்ணம் தமிழ்நாடு அணிக்கு கிடைத்திருக்கிறது.

இதனால் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் தினேஷ் கார்த்திக்கை கொண்டாடி தீர்க்கின்றனர்.