திமுத் கருணாரத்ன பற்றி வர்ணனையாளர் இயன் பிஷப் தெரிவித்த அற்புத கருத்து!

இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன பற்றி மூத்த வர்ணனையாளர் இயன் பிஷப் தெரிவித்த கருத்து!

மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மூத்த சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் பிஷப், இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன குறித்து தனது டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவும், தென்னாபிரிக்க டெஸ்ட் அணித்தலைவர் டீன் எல்கரும் கடந்த சில வருடங்களாக டெஸ்ட் ஆரம்ப வீரர்களாக பலமான மனதுடன் விளையாடியதாக இயன் பிஷப் தெரிவித்திருந்தார்.

எனவே விளையாட்டு ரசிகர்கள் திமுத் கருணாரத்ன மற்றும் டீன் எல்கர் ஆகியோரை இன்னும் அதிகமாக பாராட்ட வேண்டும் என இயன் பிஷப் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

டீன் எல்கர் மற்றும் திமுத் கருணாரத்னவை நாம் இன்னும் அதிகமாகப் பாராட்டத் தொடங்க வேண்டும் என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் சமீப ஆண்டுகளில் கிரிக்கெட்டில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஆனால் வலுவான தொடக்க ஆட்டக்காரர்களில் இருவர்.

இந்த இரண்டு வீரர்களும் சமீப ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர், இலங்கை டெஸ்ட் கேப்டன் திமுத் கருணாரத்ன கடந்த ஆண்டில் மூன்றாவது அதிக டெஸ்ட் சதம் அடித்தவர்.

இயன் பிஷப் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட குறிப்பு கீழே உள்ளது

Previous articleஉலகின் தலைசிறந்த கிரிக்கெட் நட்சத்திரங்களை வளைத்த அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு அடுத்த பலி இலங்கையா?
Next articleசிட்னி டெஸ்ட்: கவஜா மீண்டும் சதம்; வெற்றியை ஈட்டுமா இங்கிலாந்து