பிரதமராக பதவியேற்க தயார்- சஜித்தின் நிபந்தனை..!

பிரதமராக பதவியேற்க தயார்- சஜித்தின் நிபந்தனை..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்கத் தயாராக இருப்பதாக, சஜித் இன்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்பார் என விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரத்திற்குள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.