மகாஜனா அணி சாம்பியனானது..!

மகாஜனா 14 வயது பெண்கள் அணி தேசியமட்டத்தில் சாம்பியனானது இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனம் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசியமட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.

இப்போட்டி (07.02.2025) கொழும்பு றேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மகாஜனக் கல்லூரியை எதிர்த்து குருதாகல் மலியதேவ மகளிர் கல்லூரி மோதியது. இப்போட்டி ஆட்டநேர நிறைவில் 1:1 என சமநிலையானது. வெற்றி – தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் மகாஜனக் கல்லூரி 3:2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.

Previous articleஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சில் சர்ச்சை..!
Next articleஇந்தியாவை இந்தியாவிலேயே வைத்து வீழ்த்துவோம்.. வெறும் 3 நாட்களில்.. இலங்கை ஜாம்பவான் பேச்சு