மாலிக் அணிக்கு வேண்டும் என அடம்பிடிக்கும் அஸாம்..!

அடுத்துவரவிருக்கும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 அக்டோபர் 17 ஆம் தேதி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

அணிகளை இறுதி செய்வதில் சகல அணிகளும் மும்முரமாக உள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற சில அணிகள் ஏற்கனவே T2O உலகக் கோப்பைக்கான தங்கள் அணியை அறிவித்திருந்தாலும், பாகிஸ்தான், இந்தியா & இலங்கை போன்ற அணிகள் இன்னும் அணிகளை இறுதி செய்யவில்லை.

பாகிஸ்தான் அணியின் நடுத்தர வரிசையில் ஸ்திரத்தன்மை இல்லை. முகமது ஹபீஸ் போன்ற வீரர்கள் சிறந்த நிலையில் இல்லாததால், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் டி20 களுக்கான அணியில் மூத்த ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக்கை சேர்க்க விரும்புகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட  T20 தொடருக்காக நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது, இந்தநிலையில் அனுபவத்தின் காரணமாக மாலிக் அணியில் இருக்க வேண்டும் என்று அஸாம் விரும்புகிறார்.

மாலிக் கடைசியாக செப்டம்பர் 2020 இல் பாகிஸ்தானுக்காக விளையாடினார்.

எனவே, மாலிக் நடுத்தர வரிசையில் நல்ல பங்களிப்பு வழங்க முடியும் என்று பாகிஸ்தான் கேப்டன் அஸாம் கருத காரணமாகும் பாகிஸ்தான் அணியின் தலைமைத் தேர்வாளர் அதற்கு ஆதரவாக இல்லை என்பதே மாலிக் தேர்வில் இழுபறிக்கான காரணமாகும்.

சமீபத்தில், காஷ்மீர் பிரீமியர் லீக்கில் (KPL) மாலிக் சில அதிரடியாக ரன்களை அடித்து நல்ல நிலையில் இருந்தார்.  ஆட்டத்திறனை நிரூபித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் அணித்தலைவரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படுமா என காத்திருக்கலாம்.

Previous articleவெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள் பட்டியல்- இந்தியர்கள் முன்னணியில்..!
Next articleஉலகக்கிண்ண பயிற்சிகளுக்காக ஓமான் கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி