மீண்டும் ஒரு தொடரை  இழந்தது இலங்கை அணி- இங்கிலாந்தில் பரிதாபத் தோல்வி..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தான டுவென்டி டுவென்டி தொடர் நிறைவுக்கு வந்திருக்கிறது.

மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை தழுவி 3-0 என்று அவமானகரமான தோல்வியை அடைந்தது.

மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணித்தலைவர் குசல் பெரேரா வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பை மேற்கொள்ளும் தீர்மானத்தை எடுத்தார் .

ஏற்கனவே விளையாடிய இரண்டு  போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தோல்வியை தழுவி இருந்த நிலையில் இன்று நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடும்  சந்தர்ப்பத்தை இங்கிலாந்துக்கு வழங்கினார்.

ஆரம்பம் அவ்வளவு பெரிதாக இங்கிலாந்து அணிக்கு அமோகமாக இல்லாவிட்டாலும் இறுதி நேரத்தில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடி நிகழ்த்த 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது இங்கிலாந்து அணி .

இசுரு உதான மற்றும் ஹசரங்க ஆகியோர் அதிகளவான ஓட்டஙகளை வாரி வழங்கினர், 181 எனும் இலக்குடன் ஆடிய இலங்கை அணி 91 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு மோசமான தோல்வியை பெற்றுக் கொண்டது.

இதன் மூலமாக தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றி அசத்தி இருக்கிறது, இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் மாலன்  தேர்வாக  அதேநேரத்தில் தொடர் நாயகனாக சென்னை சூப்பர் கிங்ஸின் வீரரான சாம் கர்ரான் தேர்வானார் .

Previous article2 வது T20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி
Next articleEuro கிண்ணம்: Round Of 16 முதல் போட்டி டென்மார்க் கோல் மழை