மீண்டும் சாகசம் புரிந்து அசத்தியது சென்னை அணி மும்பையில் அசத்தல் வெற்றி

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நிறைவுக்கு வந்து 14வது ஐபிஎல் தொடரின் 12 ஆவது போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது .

ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான போட்டியில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

பந்துவீச்சில் இளம் வீரர் சகாரியா, தோனி ,ரெய்னா உள்ளடங்கலாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

189 என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அணித்தலைவர் சாம்சன் 1 ஓட்டத்துடன்  ஆட்டம் இழந்தாலும் முதல் 11 ஓவர்களில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 81 ஓட்டங்களை குவித்தது.

ஜோஸ் பட்லர் 49 ஓட்டங்களை குவித்தார் ,ஆயினும் 11வது ஓவரின் பின்னர் போட்டி சென்னை பக்கம் திரும்பியது.

மொயீன் அலி இடைநடுவே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 4 பிடியெடுப்புகளையும் எடுத்து அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது .

இதன் மூலம் பெங்களூரு அணியை அடுத்து சென்னை அணி 2-வது இடத்தில் புள்ளி பட்டியலில் காணப்படுகிறது. பங்கெடுத்து மூன்று ஆட்டங்களில் சென்னை இரண்டில் வெற்றி கொண்டதன் மூலமாக தோனி தலைமையிலான சென்னை அணி மீண்டு வந்துள்ளதாக ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.