முன்வரிசை வீரர்கள் சொதப்பினார், மும்பைக்கு பலமான ஓட்ட இலக்கை நிர்ணயித்தது சென்னை ..!
14வது ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஆரம்பித்துள்ளன, ஐ பி எல் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் மும்பை அணி தலைவர் ரோஹித் சர்மா விளையாடாத காரணத்தால் தலைவராக பொல்லார்ட் விளையாடுகிறார் .
மும்பை சார்பில் ரோகித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா விளையாடவில்லை இவர்களுக்கு பதிலாக அன்மொல்பிரீட் சிங் மற்றும் சவ்ரவ் திவாரி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி தலைவர் தோனி முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் வெளியிட்டார்.
பவர் பிளே ஓவர்களுக்குள்ளேயே சென்னை 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, பின்னர் இறுதியில் ருத்ராஜ் கெய்க்வாட் அதேபோன்று ஜடேஜா மற்றும் டிவைன் பிராவோ ஆகியோரின் அற்புதத துடுப்பாட்ட துணையோடு 156 ஓட்டங்களை எட்டியமை குறிப்பிடத்தக்கது.
இந்த மைதானத்தில் இந்த ஓட்ட எண்ணிக்கை ஒரு பலமான ஒரு ஓட்ட எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது.