அர்ஜென்டினாவின் நடசத்நிரம் லியோனல் மெஸ்ஸி நேற்று பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதாக ஒரு உணர்ச்சிபூர்வமான செய்தியாளர் கூட்டத்தில் உறுதிப்படுத்தினார்.
இதன்பின்னர் மெஸ்ஸி விரைவில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனில் சேருவார் என்ற வலுவான வதந்திகளுக்கு வழிவகுத்தது.
இருப்பினும், பார்சிலோனாவிற்கான பரிமாற்ற வழக்கறிஞர்கள் (Transfer Lawyers ) மற்றொரு முறையீட்டில் ஐரோப்பிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர், நிதி தரவுகளின் அடிப்படையில் பாரிசியர்கள் மெஸ்ஸியைப் பின்தொடர்வதை நிறுத்த வேண்டும் என அவர்கள் கருதுகின்றனர்.
கட்டலோனியன் ஜாம்பவான்கள் தங்கள் மிகச்சிறந்த வீரர் ஐரோப்பிய போட்டியாளர்களிடம் செல்வதைப் பார்க்க விருப்பம் கொள்ளவில்லை, மேலும் வழக்கறிஞர், ஜுவான் பிரான்கோ தனது நிறுவனம் கிளப் சார்பாக ஒரு புகாரை அளித்துள்ளார் என்பதை Twitter ல் உறுதிப்படுத்தினார்.
En nombre de socios del FC Barcelona, mi bufete ha preparado una queja ante la Commission Europea y demandas de suspension provisional ante justicia civil y administrativa en Francia para impedir que el Paris-Saint Germain firme a Lionel Messi. pic.twitter.com/Gksj8qYYvu
— Juan Branco ✊ (@anatolium) August 8, 2021
பார்சிலோனா பங்குதாரர்கள் சார்பாக, எனது நிறுவனம் ஐரோப்பிய ஆணையத்திடம் ஒரு புகாரை தயார் செய்துள்ளது, மற்றும் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் லியோனல் மெஸ்ஸியை புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தடுக்க பிரான்சில் உள்ள சிவில் மற்றும் நிர்வாக நீதிமன்றங்களில் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
ஆகமொத்தத்தில் மெஸ்ஸி அடுத்து என்ன செய்வார் என்பது கேள்விக்குரியதே.
ஆயினும் சகலவிதமான ஆயத்தங்களுடனும் PSG கழகம் மெஸ்ஸிக்காக காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.