ஊடகவியலாளர் சந்திப்பின்போது ‛தண்ணீர் குடிங்க’ என கோகோ கோலா குளிர்பான போத்தலை ஒதுக்கிவைத்த பிரபல கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் செயலால், அந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 29 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் அளவிற்கு சரிந்தமை ஆச்சரியத்துக்குரியது.
ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. இத்தொடரின் போர்ச்சுகல் அணி விளையாடிய போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்பாக போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவரது மேசையின் மீது இரண்டு கோகோ கோலா குளிர்பான போத்தல்கள் இருந்ததை கவனித்த ரொனால்டோ, அவற்றை அகற்றிவிட்டு, தண்ணீர் போத்தலை எடுத்து வைத்தார். அதன்பின்னர் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீரை குடிக்குமாறு சைகையில் குறிப்பிட்டார்.
“DRINK WATER”
Cristiano Ronaldo: not a big Coca Cola guy ?pic.twitter.com/iy90unMV6U
— Front Office Sports (@FOS) June 15, 2021
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. கோகோ கோலா குளிர்பானத்தை பிரபல கால்பந்து வீரர் ஒருவர் அகற்றியதால், இது அந்த குளிர்பான நிறுவனத்திற்கு எதிரான விளம்பரமாக உருவெடுத்தது.
இதன் எதிரொலியாக, கோகோ கோலா நிறுவனம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,300 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளதாக்க செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.