விராட் கோலி உடனடியாக என்ன செய்ய வேண்டும் ?  கவாஸ்கர் தீர்க்கமான ஆலோசனை .!

விராட் கோலி உடனடியாக என்ன செய்ய வேண்டும் ?  கவாஸ்கர் தீர்க்கமான ஆலோசனை .!

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியை இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக தடுமாறுகிறார்.

2014ஆம் ஆண்டு தடுமாறிய கோலி, 2018 தொடரில் மிகச் சிறப்பாக தன் தவறுகளை திருத்திக்கொண்டு 593 ஓட்டங்களை விளாசினார் .

ஆனால் இப்போது மீண்டும் 2014 செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பதால் சிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் தலைவரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கோலிக்கு ஒரு ஆலோசனை முன்வைத்திருக்கிறார் .

2003 /04 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் அவுஸ்ரேலியாவின் சிட்னியில் என்ன செய்தாரோ அதையே கோலி செய்ய வேண்டும் என்றும்  ஓப் ஸடம்புக்கு வெளியில் செல்லும் பந்துகளை தொடக்கூட நினைக்கக்கூடாது என்றும் லெக் சைடில் மட்டுமே கோலி விளையாட முற்பட வேண்டும் எனும் கருத்தை கவாஸ்கர் முன்வைத்திருக்கிறார்.

அவர் SRT க்கு (டெண்டுல்கர்) விரைவான அழைப்பு விடுத்து, ‘நான் என்ன செய்ய வேண்டும்?’  என கேட்க வேண்டும்.

சிட்னியில் சச்சின் டெண்டுல்கர் செய்ததை அவர் செய்ய வேண்டும். நான் கவர் டிரைவ் விளையாடப் போவதில்லை என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது ஸ்டம்பில் அவர் பந்துகளை ஆடாமல் விட்டுவிட வேண்டும்.

ஒரேவிதமாக கோலி வீழ்வது அது எனக்கு கொஞ்சம் கவலையாக இருக்கிறது. 2014 ஆம் ஆண்டில், அவர் ஆஃப்-ஸ்டம்பைச் சுற்றி அதிகமாக வெளியேறினார், “என்று கவாஸ்கர் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2003-04 தொடரில், சிட்னியில் நடந்த நான்காவது டெஸ்டில் டெண்டுல்கர் மிகுந்த மன உறுதியையும் திறமையையும் வெளிப்படுத்தினார்.

அவர் கவர் டிரைவை ஆஃப் சைடில் முழுவதுமாக கைவிட்டு விக்கெட்டின் லெக் சைடை குறிவைத்தார்.

436 பந்துகளில் 241 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 705/7பெற உதவியது, இந்த உக்தியையே கோலியும் கைக்கொள்ள வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்தார்.