ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடைசி 15 மாதங்கள் மிகச்சிறப்பாக அமைந்து இருக்கிறது

ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடைசி 15 மாதங்கள் மிகச்சிறப்பாக அமைந்து இருக்கிறது 💯 அவர் இடம்பெற்ற அணி கோப்பையை வென்று இருக்கிறது 🤷

🔥 ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணியில் இடம் பெற்று இருந்தான்!

🔥 கொல்கத்தா அணியின் கேப்டனாக போன வருஷம் கோப்பையை வென்றான்!

🔥 இராணி கோப்பையை வென்ற மும்பை அணியில் இடம் பெற்று இருந்தான்!

🔥 சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தான்!

🔥 இப்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக அந்த அணியை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வைத்திருக்கிறான்!

🔥 இதுமட்டுமல்லாமல் 18 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி பெற்று இருந்த மும்பை அணியை தோல்வி அடைய செய்து இருக்கிறான்!

🔥 இந்த சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறான்!

~ இந்த சீசனில் இதுவரை 39 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறான் ஸ்ரேயாஸ் ஐயர் 😎
முதல் இடத்தில் LSG வீரர் பூரன் 40 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளான்!

🔥 இவையனைத்திற்கும் மேலாக ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறான அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று இருக்கிறான்! இச்சாதனையை செய்த முதல் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தான்!
அந்த அணிகள் டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகும்!

இப்படி எங்கும் எதிலும் ஸ்ரேயாஸ் ஐயரே நிறைந்து இருக்கிறான்! நாளை கோப்பையை வென்றால் இன்னும் பல சாதனைகள் ஸ்ரேயாஸ் படைப்பான் 🔥

#shreyasiyer #punjabkings #ipl2025 #ipl #cricketfans #cricketlovers

✍️ Sathiya kumaran

Previous articleஐபிஎல் பைனலில் இப்படி ஒரு ராசியா.. ஆர்சிபி ஐபிஎல் கோப்பை ஜெயிக்கப் போவது உறுதி.. ரசிகர்கள் குஷி
Next articleசண்டைலதான் தோத்திருக்கோம் , போர்ல அல்ல”- Shreyas