ஆசியக் கோப்பை இலங்கையில் – திகதிகள் அறிவிப்பு…!

ஆசியக் கோப்பை 2022 இலங்கையில் இந்த ஆண்டின் இறுதியில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ளது, இப்போட்டி டி20 முறையில் நடைபெறவுள்ளதுடன் அதற்கான தகுதிச் சுற்றுகள் 20 ஆகஸ்ட் 2022 முதல் விளையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பைப் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது, ஆனால் கோவிட்-19 மற்றும் அதன் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு போட்டியை போட்டியின் ஆளும் குழுவான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) ரத்து செய்தது.

ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியா அதிக ஆதிக்கம் செலுத்தும் அணியாக உள்ளது. 1984 ஆம் ஆண்டு தொடக்கம் 14 பதிப்புகளில், இந்தியா ஏழு முறை பட்டத்தை வென்றுள்ளது – 1984, 1988, 1990/91, 1995, 2010, 2016 மற்றும் 2018 , 2004, 2008 மற்றும் 2014.

ஆசியக் கோப்பை வரலாற்றில் அவர்கள் அதிக முறை (14) விளையாடியுள்ளனர், அதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை தலா 13 முறை போட்டியில் விளையாடியுள்ளன.

ஆசிய கோப்பை 2022ல் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணி உட்பட்ட ஆறு அணிகள் பங்கேற்கும்.

2020 ACC மேற்கு வலயத்திலிருந்து T20 இலிருந்து முன்னேறிய UAE மற்றும் Kuwait மற்றும் 2020 ACC கிழக்கு பிராந்திய T20 இலிருந்து முன்னேறிய சிங்கப்பூர் மற்றும் Hing Kong ஆகிய அணிகளுக்கு இடையே தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் பதவிக்காலம் 2024 வரை ஒரு வருடத்திற்கு ஒருமனதாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ACC AGM இல் இந்த முடிவு எடுக்கப்பட்டது.