இங்கிலாந்து அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடி வென்றது உண்மைதான்.
ஆனால் மெக்கல்லமின் வழிக்காட்டுதலால் மட்டுமே வெற்றி சாத்தியப்படவில்லை.
இங்கிலாந்து வீரர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட, நடைமுறையில் இருக்கும் ஒன்றை எடுத்துக்கொண்டு, புத்திசாலித்தனமான ஒரு முடிவையும் எடுத்தார்கள்.
என்னவென்றால்; அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுவதை யுக்தியாய் எடுத்துக்கொண்டதோடு, ஆடுகளத்தில் இருந்த உயிரையும் எடுத்துவிட்டார்கள். பந்து வீச்சாளர்கள் ஸ்விங் சூழ்நிலையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். இல்லையென்றால் ஆடுகளத்தயாரிப்பில் இருக்கும் சிற்சில குறைகளை நம்பி இருக்க வேண்டும். இனி தட்டையான ஆடுகளங்கள்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
அட்டாக்கிங் கிரிக்கெட் இங்கிலாந்திற்கு கடந்த ஆறேழு வருடங்களில் கைவந்த ஒன்றாய் இருந்ததாலும், அதற்கு வசதியான தட்டையான ஆடுகளங்கள் கிடைத்ததாலும், பேட்டிங்கில் அவர்களது அட்டாக்கிங் கிரிக்கெட் யுக்தி 100% பலனைத் தந்தது.
பொதுவாக தட்டையான (flat) ஆடுகளங்களில் பந்தை பெரும்பாலும் full லென்த்தில், ஸ்டம்ப் லைன்களில் அதிகம் வைக்க வேண்டும். ஸ்விங் இருக்கும் போது வெளியில் வீசலாம். இல்லையென்றால் தட்டையான ஆடுகளங்களில் வெளியில் வீசுவது விக்கெட் வாய்ப்புகளை உருவாக்காது. ரன்களும் கூடவே கசியும். பந்துவீச்சாளரும் களைப்படைவார். இதனால் பந்துவீச்சிலும் பெரிதாய் வெளியே வீசாமல், பேட்ஸ்மேனை ஆட வைக்கும் லைன் & லென்த்திலேயே அதிகம் வீசினார்கள்.
இப்படி இல்லாமல் ஸ்விங் சூழல் + உயிருள்ள ஆடுகளங்கள் அமைத்து, அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுவதாய் முடிவு செய்திருந்தால், பத்து மெக்கல்லம் வந்தாலும் இங்கிலாந்து ஜெயிச்சிருக்காது!
நான்கு வெற்றிகளுக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “நாங்கள் புது கிரிக்கெட்டை தரப்போகிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டை விறுவிறுப்பாக்க போகிறோம்” என்று பேசுவதெல்லாம் வெற்றியின் மிதப்பு மட்டுமல்ல, அவர்கள் ஆடுகளத்தில் செய்துகொண்ட சமரசத்தை மறைக்கும் யுக்தி!
கிரிக்கெட் விளையாட்டு அதன் மிகப்பெரிய விளம்பர தூதர்களாக விளங்கிய வீரர்களையே இம்சை தராமல் விட்டதில்லை. இதில் இங்கிலாந்து மட்டும் விதிவிலக்கா என்ன! நிச்சயம் துடிப்புள்ள விக்கெட்டுகளில் சிக்க வைத்து இரசிக்கும்!
Richards
YouTube தளத்துக்கு செல்ல ?
வரலாற்றுச் சாதனை படைத்த இங்கிலாந்து ?