இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு இங்கிலாந்தில் கொரோனா 10 நாட்கள் தனிமைப்படுத்தல்…!

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு இங்கிலாந்தில் கொரோனா 10 நாட்கள் தனிமைப்படுத்தல்…!

 இங்கிலாந்து கிரிக்கெட்டின் மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர், இந்த நிலையில் இங்கிலாந்தில் தங்கியிருக்கும் 23 இந்திய வீரர்களுள் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முன்னணி விக்கெட் காப்பாளரும் அதிரடி நட்சத்திரமான ரிஷாப் பான்ட் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதன் காரணத்தால் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகும் போட்டிகளுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில், பான்ட் கொரோனாவில் இருந்து விடுபட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக வாய்ப்புகள் உருவாகும் என்றும் நம்பப்படுகிறது.

அப்படி இல்லையாக இருந்தால் அணியிலே இருக்கின்ற விருத்திமான் சஹா அணியின் விக்கெட் காப்பாளராக இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் தெரிகின்றன.