இந்திய அணியோடு இணையும் புதிய பயிற்சியாளர்..!

இந்திய அணியோடு இணையும் புதிய பயிற்சியாளர்..!

பாடி அப்டன் மேற்கிந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைவார் என்றும் 2022 டி20 உலகக் கோப்பை வரை அணியில் இருப்பார் என்றும் இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது ?

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணியில் பங்கு வகித்த மனநல நிபுணரான பேடி அப்டன், ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் அக்டோபர்-நவம்பர் டி20 உலகக் கோப்பைக்கான தயார்படுத்தல்ளிகல் உதவுவதற்காக இந்திய அணியின் துணைப் பணியாளர்களில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட்டில் பல்வேறு நிலைகளில் ஈடுபட்டுள்ளார் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் நல்ல உறவை பேணி வருகிறார். இருவரும் இணைந்து பல அணிகளில் பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

2010 களின் பிற்பகுதியில் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனுக்கு அப்டன் உதவும்போது டிராவிட் ஒரு வீரராக இருந்தார். இருவரும் பின்னர் இரண்டு ஐபிஎல் அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகியவற்றில் முறையே வழிகாட்டியாகவும் தலைமை பயிற்சியாளராகவும் இணைந்தனர்.

“இவர் இப்போது வெஸ்ட் இண்டீஸில் ஒரு மனநல பயிற்சியாளராக சேருவார், மேலும் டி20 உலகக் கோப்பை வரை இருப்பார்” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறினார்.

?: BCCI

#PaddyUpton #WIvsIND #TeamIndia #Cricket