இலங்கை அணியை குறைத்து மதிப்பிட்ட பங்களாதேஷ் பணிப்பாளருக்கு மஹேல பதிலடி…!
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் தீர்க்கமான போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. போட்டிக்கு முன் இரு அணி வீரர்களும், பணியாளர்களும் எதிரணி வீரர்களை விமர்சித்ததைகாண முடிந்தது.
சமீபத்தில், ஷகிப் மற்றும் முஷ்தாபிசுர் தவிர வங்கதேசத்தில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்று தசுன் ஷானக குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த பங்களாதேஷ் அணியின் பணிப்பாளர் காலித் மஹ்மூத், ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோரின் நிலையில் இலங்கைக்கு பந்துவீச்சாளர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.
காலித் மஹ்மூத்தின் இந்த கருத்து குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு தாங்கள் யார், யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை பேட்ஸ்மேன்கள் காட்ட வேண்டிய நேரம் இது. என பதிவிட்டுள்ளார்.
Looks like it’s time for @OfficialSLC bowlers to show the class and batters to show who they are on the field..??#AsiaCup2022 https://t.co/txWm7wH4nC
— Mahela Jayawardena (@MahelaJay) August 31, 2022
எமது YouTube தளத்துக்கு ?