இலங்கை தொடரிலிருந்து விலகும் ஷகிப் ல் ஹசன்..!

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் விலக தீர்மானித்துள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணியில் ஷாகிப் சேர்க்கப்படவில்லை, மேலும் அவர் டெஸ்ட் தொடரிலும் விளையாட மாட்டார் என்று அந்நாட்டின் கிரிக்கெட் நடவடிக்கைகளின் தலைவர் ஜலால் யூனுஸ் கிரிக்பஸ் இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.

மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் வருகிறது.

ஷாகிப் சமீபகாலமாக கண் நோயால் அவதிப்பட்டு வந்தார், இது அவரது பேட்டிங்கையும் பாதித்தது.

இந்த ஆண்டு பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார், ஆனால் 11 போட்டிகளில் 249 ரன்கள் குவித்து தனது வழக்கமான தாளத்திற்கு திரும்பினார்.

இலங்கைக்கு எதிரான முழு தொடரிலிருந்தும் ஓய்வெடுக்க விரும்புவதாக ஜலால் யூனுஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவருடைய கண்கள் இப்போது நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அவருக்கு ஓய்வு தேவை என்று நினைக்கிறேன். அப்போது அவர் முழு உடற்தகுதியுடன் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைய முடியும் என்று கிரிக்கெட் நடவடிக்கைகளின் தலைவர் கூறினார்.

மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் இலங்கையின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கும்.