ஐபிஎல் 2022: போட்டியில் தங்களது அதிக விலையை நியாயப்படுத்த தவறிய 5 வெளிநாட்டு வீரர்கள்.

ஐபிஎல் 2022: போட்டியில் தங்களது அதிக விலையை நியாயப்படுத்த தவறிய 5 வெளிநாட்டு வீரர்கள்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 ஏற்கனவே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது. போட்டி தொடங்கிய சில நாட்களே, சில அட்டகாசமான போட்டிகளை நாங்கள் கண்டிருக்கிறோம்.

ராகுல் டெவாடியாவின் கடைசி ஓவர் அதிரடி, 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் பேட் கம்மின்ஸ் 56 ரன்கள் எடுத்தது வரை, உற்சாகத்திற்கு பஞ்சமில்லை. சில கிரிக்கெட் வீரர்கள் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், இன்னும் பலர் போட்டியை சிறப்பிக்கவில்லை.

அதிக எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவில் இறங்கிய பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் அதிக விலைக் குறியீட்டை நியாயப்படுத்த இதுவரை தவறியுள்ளனர்.

ஐபிஎல் 2022-ல் தம்மை நிரூபிக்க தவறிய 5 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களைப் பார்ப்போம்.

1.  டேனியல் சாம்ஸ் (INR 2.60 கோடி).

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயதான ஆல்-ரவுண்டர், புதிய பந்தின் ஸ்பெல்களுக்கு பெயர் பெற்றவர். பிக் பாஷ் லீக்கில் (BBL) அவரது சிறந்த ஆட்டங்கள் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் (MI) உடன் 2.60 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தத்தைப் பெற்றன.

இருப்பினும், ஐபிஎல் 2022 இல் அவரது ஆட்டம் இதுவரை சோபிக்கவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியில், தேவையற்ற சாதனையை படைத்தார். அவர் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது மிக மோசமான ஓவரை வீசினார், ஒரு ஓவரில் 35 ரன்களை சகநாட்டவரான பாட் கம்மின்ஸிடம் விட்டுக்கொடுத்தார். இதனால் அடுத்த இரண்டு ஆட்டங்களில் விளையாடும் XI இல் இருந்து சாம்ஸ் வெளியேற்றப்பட்டார்.

2. கீரன் பொல்லார்ட் (INR 6 கோடி).

ஐபிஎல் 2022 இல் அவர் தனது பெயருக்கு ஏற்ப நிரூபிக்க தவறிவிட்டார். பொல்லார்ட் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் 57 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் பந்திவீச்சிலும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார், ஓவருக்கு 10 ரன்கள் என்ற விகிதத்தில் கொடுத்துள்ளார்,  அவருக்கு ஹர்திக் பாண்டியாவை விட முன்னுரிமை அளிக்கப்பட்டது, இந்த நடவடிக்கை தற்போது எந்த லாபத்தையும் மும்பைக்கு கொடுக்கவில்லை.

3. மொயீன் அலி (INR ரூ 8 கோடி).

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) INR 8 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது.

முந்தைய பதிப்பில் நடப்பு சாம்பியனுக்கான அவரது அற்புதமான ஆட்டத்தை அடுத்து அவர் ஏலத்துக்கு முன்னர் அணியால் தக்கவைக்கப்பட்டார்.

ஐபிஎல் 2021 பட்டத்தை வென்ற சென்னை அணியின் பயணத்தில் 357 ரன்கள் குவித்து ,ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதில் அவர் பெரும் பங்கு வகித்தார். இருப்பினும், இந்த பதிப்பில் மொயீன் தன்னை நிரூபிக்க தவறிவிட்டார்.

ஆல்-ரவுண்டர் நான்கு ஆட்டங்களில் 21.50 சராசரியில் 86 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தவிர, அவர் வீசிய 4 ஆட்டங்களில் வீசிய ஆறு ஓவர்களில் விக்கெட் இல்லாமல் போனார்.

ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான தொடக்கத்தைக் கண்டதால், முதல் நான்கு ஆட்டங்களில் சென்னையும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

4. ரொமாரியோ ஷெப்பர்ட் (INR 7.75 கோடி).

ஐபிஎல்லின் முதல் சீசனில் அவர் முத்திரை பதிக்கத் தவறிவிட்டார். மேற்கிந்திய வீரர் அவர் விளையாடிய இரண்டு போட்டிகளில் திறமையற்றவராக இருந்தார், 120 ரன்களுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் 32 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஷெப்பர்ட் அதே நேரத்தில் 9.38 என்ற எகானமி ரேட்டில் ரன்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட்டுகள் 5 மட்டுமே.

5.ரோவ்மேன் பவல் (INR 2.80 கோடி).

அவர் தனது அணியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டார். 28 வயதான ஆல்-ரவுண்டர் நான்கு ஆட்டங்களில் 31 ரன்களை மட்டுமே குவித்துள்ளார், மிடில் ஆர்டரில் அவரது மோசமான ஆட்டம் ப்ரித்வி ஷா வழங்கிய டெல்லி அணிக்கான நல்ல தொடக்கத்தைப் பயன்படுத்தத் தவறிய டெல்லி கேபிடல்ஸை காயப்படுத்தியது.