ஒரே நாளில் இலங்கைக்கு 2 ஆசியக் கிண்ணங்கள்- காத்திருக்கும் ரசிகர்கள்…!

ஒரே நாளில் இரண்டு ஆசியக் கிண்ணங்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இலங்கை அணிக்கு கிட்டியுள்ளது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

இலங்கை ண 12 வது தடவையாக ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் நிலையில் 6 வது தடவையாக ஆசியக் கிண்ணத்தை தனதாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதேபோன்று ஆசியக கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் ஹொங்கொங் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் வலைப்பந்தாட்ட அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இலங்கை அணிகள் கிண்ணத்தை சுவீகரிக்குமாக இரு அணிகளுக்கும் 6 வது ஆசியக் கிண்ணமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களை இந்த YouTube காணொளியில் பாருங்கள் ?