சாஹிட் அஃப்ரிடியின் அதிரடி முடிவு – ஏன் இந்த அவசரம் ?

அடுத்தவருடம் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியுடன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சாஹித் அஃப்ரிடி கூறியுள்ளார்.

சாஹித் அஃப்ரிடி, சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தபோது ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். 1996-ல் தன்னுடைய 2-வது சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் 37 பந்துகளில் சதமடித்து உலக சாதனை ஏற்படுத்தினார்.

இதன்பிறகு இந்தச் சாதனையை கோரே ஆண்டர்சனும் (36 பந்துகள்) டி வில்லியர்ஸும் (31 பந்துகள்) முறியடித்தார்கள் .

அப்ரிடி கடைசியாக 2016-ல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். அதன்பிறகு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் தொடர்ந்து விளையாடி வந்தார். 50 PSL ஆட்டங்களில் விளையாடிய அஃப்ரிடி, அடுத்த வருடத்துடன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2022 பிஎஸ்எல் போட்டி, ஜனவரி, பெப்ரவரியில் நடைபெறவுள்ளது. இதுவரை மூன்று அணிகளில் விளையாடிய அப்ரிடி, அடுத்த வருடம் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். முல்தான் அணி எனக்கு அனுமதி தந்தால், குவெட்டா அணி உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்தால் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாடுவேன் என அஃப்ரிடி கூறியுள்ளார்.

41 வயது அஃப்ரிடி, பாகிஸ்தான் தேசிய அணிக்காக 27 டெஸ்ட்கள், 398 ஒருநாள், 99 T20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

Previous articleஉலகின் 2வது உயரமான மனிதன் மெஹர்சாட் உதவியோடு பரா ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கி படையெடுக்கும் ஈரான்..!
Next articleஇங்கிலாந்தின் உலகக் கிண்ண வெற்றி நாயகன்- அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் தேர்வு ..!