சென்னையின் வெற்றிக்கு தோனி மட்டும் காரணமல்ல -பிராவோ கருத்து..!

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸை மிகவும் ஆதிக்கம் செலுத்த தோனியின் கேப்டன்சியோ அல்லது அவரது வீரர்கள் மீதான நிதானமான பார்வையோ மட்டும் சென்னையின் வெற்றிக்கு காரணமில்லை என பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ தெரிவித்தார்.

உரிமையாளர்களின் வெளிப்புற குறுக்கீடு இல்லாததும் அணியின்  நிலையான ஓட்டத்திற்கு பிரதான காரணம் என்று கூறுகிறார்.

ஐயத்திற்கு இடமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் நிலையான அணியாகும், ஐந்து முறை போட்டியை வென்றதைத் தவிர பிளேஆஃப்களில் அதிகபட்சமாக முன்பேறியிருக்கிறது.

“உரிமையாளர்களிடமிருந்து வெளிப்புற குறுக்கீடு அல்லது அழுத்தம் இல்லை, மேலும் அவர்கள் வீரர்களை சுயமாக இருக்க அனுமதிக்கிறார்கள். இதுதான் இந்த உரிமையின் (franchise) அழகு” என்று பிராவோ கூறினார்.

பிரபல டி20 லீக்கின் வரவிருக்கும் பதிப்பிற்கு முன்னதாக அணி அமைப்பு பற்றி பேசுகையில், “இது நன்றாக இருக்கிறது. எங்களிடம் மிகச் சிறந்த அணி உள்ளது. கடந்த சீசனில் நாங்கள் நிறுத்திய இடத்திலிருந்து தொடர விரும்புகிறோம், “மிக இளம் பந்துவீச்சு தாக்குதலின் மூலம் நாங்கள் சில சிறந்த விஷயங்களைச் செய்தோம்,” என்று வியாழன் அன்று  அவர் PTI இடம் கூறினார்.

“இந்த ஆண்டு, ஷர்துலை (தாகூர்) திரும்பப் பெறுகிறோம், அது போனஸ். ஃபிஸ்ஸும் (முஸ்தாபிசுர் ரஹ்மான்) அனுபவம் வாய்ந்தவர் மற்றும் தரம் வாய்ந்தவர்.

“(மதீஷா) பத்திரனா, நாங்கள் அவரை குழந்தை மலிங்கா என்று அழைக்கிறோம். கடந்த சீசனில் சிறப்பாக விளையாடியவர் துஷார் தேஷ்பாண்டே. இவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் வரவிருக்கும் சீசனை ஆவலோடு எதிர்நோக்குகிறோம் என்று பிராவோ மேலும் கூறினார்.

Previous articleபங்களாதேஷ், கனடா அணிகளை சந்திக்க தயாராகும் கனடா கிரிக்கெட் அணி..!
Next articleஇலங்கை அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சாளர் நியமனம்…!