டெஸ்ட் அறிமுகத்திற்காக காத்திருக்கும் ஜப்னா கிங்ஸ் இளம் வீரர்கள் இருவர்..!

டெஸ்ட் அறிமுகத்திற்காக காத்திருக்கும் ஜப்னா கிங்ஸ் இளம் வீரர்கள் இருவர்..!

இலங்கை சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளது .

முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவிக் கொண்ட நிலையில் 2-வது போட்டி தொடரை தக்கவைப்பதற்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இலங்கையின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் எம்புல்தெனிய அதேபோன்று பிரவீன் ஜெயவிக்கிரம ஆகியோர் கொரோனா காரணமாக அணியில் இருந்து விலகி விட்டனர், இதன் காரணத்தால் ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் கலக்கும் தீக்க்ஷன மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வெல்லாலகே இருவரும் டெஸ்ட் அணியில் விளையாடும் பதினொருவரில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

ஏனென்றால் அணியில் ரமேஷ் மட்டுமே இருக்கின்ற காரணத்தால் இன்னும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை அணி நிர்வாகம் இணைத்துக்கொள்ளுமாக இருந்தால் நிச்சயமாக தீக்க்ஷன, வெல்லாலகே ஆகியோர் டெஸ்ட் அறிமுகத்தையும் மேற்கொள்வது உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.