தமிழகத்தின் அறிமுக வீரர் சாய் சுதர்சன் -போட்டியின் இடைநடுவே எடுத்த ‘Toilet Break’

தமிழகத்தின் அறிமுக வீரர் சாய் சுதர்சன் -போட்டியின் இடைநடுவே எடுத்த ‘Toilet Break’

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஒரு சிறந்த சீசனுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த 20 வயது இளைஞர் சாய் சுதர்சனுக்கு ஒரு சங்கடமான தருணமாக நேற்றைய போட்டி இருந்தது, ஏனெனில் அவர் “Toilet Break” எடுப்பதில் இருந்து முழு வீரர்களும் அவருக்காகக் காத்திருந்தனர்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சாய் சுதர்சன் நேற்று அறிமுகமாகினார்.

உலகம் முழுவதும் இருக்கும் திறமைகளை ரசிகர்கள் அறிந்துகொள்ள உதவுவது மட்டுமல்லாமல், பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஓரிரு வியத்தகு சம்பவங்கள் போட்டியில் அரங்கேறுகின்றன.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்து 189/9 ரன்கள் எடுத்த நிலையில், டைட்டன்ஸ் அணியும் ரன் வேட்டையில் விறுவிறுப்பான ஈடுபட்டது.

அவர்கள் தொடக்கத்தில் மேத்யூ வேட்டை இழந்தாலும், அவர்களின் 3வது பேட்டர் அறிமுக வீரர் சாய் சுதர்சன் தனது இன்னிங்ஸால் அனைவரையும் கவர்ந்தார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஒரு சிறந்த சீசனுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த 20 வயது இளைஞருக்கு ஒரு சங்கடமான தருணம் இருந்தது,

ஏனெனில் அவர் போட்டியின் நடுவேயான Strategic Time out நேரத்தில் அவருக்கு உண்டான அவசர நிலை காரணமாக “Toilet Break” எடுத்ததிலிருந்து முழு வீரர்களும் அவருக்காகக் காத்திருந்தனர். இதையே வர்ணனையாளர்களும் உறுதி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மனிதர்கள் எல்லோருக்கும் ஏற்படுகின்ற அவசர நிலையாக இது இருந்தாலும்கூட, ஒரு நேரடி போட்டியின் போது, அதுவும் அறிமுக வீரர் ஒருவர் அசத்தி கொண்டிருந்த தருணத்தில் இந்த மாதிரியான ஒரு அசாதாரண நிகழ்வு அவருடைய ஓட்ட குவிப்பை ஓரளவிற்கு மழுங்கடித்து இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் கவலையான விடயம்.

அதன் பின்னர் சொற்ப நேரத்தில் சாய் சுதர்சன் ஆட்டம் இழந்தமையும் குறிப்பிடத்தக்கது