தினேஷ் கார்த்திக்கின் கதை ?

#தினேஷ் கார்த்திக்கின் கதை ?

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாகவே இந்தியாவின் விக்கெட் காப்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் தினேஷ் கார்த்திக், அதுமாத்திரமல்லாமல் இந்திய அணிக்கு தோனி முன்னதாகவே அடுத்த தலைவராவார் எனவும் பேசப்பட்டவர் , அத்தோடு தலைவர் போட்டியில் தினேஷ் கார்த்திக்கும் இருந்தார் என்பது அனைவரும் அறியாதது.

தோனியின் ஆக்கிரமிப்பே கார்த்திக்கை காணாமல் செய்கிறது ,DK உள்ளூரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய தேசிய கிரிக்கட் அணியில் MS தோனிக்கு 2வது விக்கெட் கீப்பராக இருந்தார் அத்தோடு தமிழ்நாடு அணியின் தலைவராகவும் இருந்தார்.

அவரது சக அணிவீர்ர் முரளி விஜய், தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார், இது முழு TN ரஞ்சி அணிக்கும் தெரியும். கார்த்திக்கைத் தவிர ?

இறுதியாக ஒரு நாள் அவள் முரளி விஜயின் குழந்தையை சுமந்து கர்ப்பமாக இருப்பதாகவும் விவாகரத்து செய்ய விரும்புவதாகவும் கூறினாள். அவர்கள் விவாகரத்து பெற்றனர், மேலும் அந்தப்பெண் முரளி விஜயுடன் குடும்ப வாழ்வுக்கு சென்றுவிடுகிறாள்.

DK மனதளவில் உடைந்து போனார், ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார், தாடி வளர்த்தார், தேவதாஸ் ஆனார், அவரது செயல்திறன் குறைந்து, இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

 

அவர் ரஞ்சியில் தோல்வியடையத் தொடங்கினார் மற்றும் முரளி விஜயிடம் அதனது மனைவியை மட்டுமல்ல கேப்டன் பதவியையும் இழந்தார்.

அவர் ஐபிஎல் போட்டியிலும் தோல்வியடையத் தொடங்கினார், மேலும் அவரது ரஞ்சி அணியின் தோல்விகளால் மனச்சோர்வடைந்ததால் தற்கொலை செய்து கொள்ள விரும்பினார். ஜிம்மிற்கு செல்வதையும் நிறுத்திவிட்டார்.

அவரது பயிற்சியாளர் அவரை அவரது வீட்டிற்குச் சென்று பார்வையிட்டார், DK முழு குழப்பத்தில் இருப்பதைக் கண்டார். DKவை மீண்டும் தனது பயிற்சியைத் தொடங்குமாறு வற்புறுத்தி, தீபிகா பல்லிகலுக்கும் பயிற்சி அளித்து வந்த ஜிம்மிற்கு அவரைத் திரும்ப அழைத்துச் சென்றார்.

அவர் பரிதாபமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவள்(தீபிகா) பயிற்சியாளருடன் சேர்ந்து அவருக்கு ஆலோசனை வழங்கத் தொடங்கினாள், மெதுவாக DK க்கான பயிற்சியைத் தொடங்கினாள். இருவரும் வெறி பிடித்தவர்கள் போல் வேலை செய்ய ஆரம்பித்தனர்.

DK மறுவாழ்வு பெறுகிறார் ?

முரளி விஜய் , DK யின் முதல் மனைவியைத் திருமணம் செய்து கொண்டார், ஆனால் அவர் தோல்வியை நோக்கி பயணப்பட தொடங்கினார்.முதலில் இந்திய அணியிலிருந்தும் பின்னர் CSK இலிருந்தும் நீக்கப்பட்டார்.

 

ஆனால் தீபிகாவால் ஊக்கப்படுத்தப்பட்ட DK வலைப்பயிற்சிகளை ஆரம்பித்து உள்நாட்டுப் போட்டிகளில் அதிக ஸ்கோரை அடித்து மீளவும் தனக்கான இடத்தை பிடிக்க ஆரம்பித்தார்.

அவர் மீண்டும் மீண்டும் இந்திய தேசிய அணிக்காக 2019 உலக்கிண்ண தொடருக்கு வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் IPL போட்டித்தொடரில் KKR அணியின் கேப்டனானார்.

தீபிகாவை மணக்கிறார் ❤️

அதன்பின்னர் ரிஷப் பான்ட் வந்து கார்திக்கிற்கு காலியாக இருந்த அந்த இடத்தைப் கெட்டியாக பிடித்தார்.
DK 34 வயதில் அவர் தனது நேரம் முடிந்துவிட்டது என்பதை அறிந்து அவர் கேகேஆரிலிருந்து கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகிகொள்கிறார்.

அந்தநேரத்தில் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் மட்டும் விளையாட DK விரும்பினார். அவருடைய மனைவி தீபிகா கர்ப்பமாகிறார், அவர்களுக்கு இரட்டை குழந்தைகளை கடவுள் பரிசளிக்கிறார். பிள்ளைப்பேற்றுக்குப் பின்னர் தீபிகாவும் விளையாடுவதை நிறுத்தினாள்.

போயஸ் தோட்டத்தில் கிடைத்த ஆடம்பரமான வீட்டைச் சொந்தமாக்க வேண்டும் என்பது அவரது கனவு. நிறைய செலவாகும், அதை வாங்க முடியுமா என்று உறுதியாக அவர்களுக்கு தெரியவில்லை. சற்றே யோசிக்கிறார்கள்.

ஆனால் DK யின் மனைவி அதனை விடுவதாக தெரியவில்லை, அதை எடுங்கள், நாங்கள் இருவரும் திரும்பி வருவோம் என்று நம்பிக்கை ஊட்டுகிறாள் தீபிகா. DK யுடன் சேர்ந்து பயிற்சியைத் தொடங்கினாள். போயஸ் தோட்டத்தில் உள்ள அரண்மனை வீட்டை சொந்தமாக்குகிறார்கள்.

DK க்கு CSK காசி விஸ்வநாதனிடம் (CEO) இருந்து அழைப்பு வருகிறது, அணி அவரை wk ஆக விரும்புவதாகக் கூறி DK கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். அதன்பின்னர் 2022 இல் நடந்த IPL மெகா ஏலத்தில் CSK அவரைப் பெறுவதற்கு தங்களால் இயன்றவரை முயற்சித்தது ஆனால் RCBயால் ஏலம் எடுக்கப்படுகிறார் DK. மறுபுறத்தே CSK நியூசிலாந்தின் டெவோன் கான்வே பக்கம் சென்று Faf மற்றும் தோனிக்கு மாற்றாக வளைத்துப்போடுகிறது.

இதேநேரத்தில் DK யின் மனைவி தீபிகா பிரசவத்திற்குப் பிறகு 6 மாதங்களுக்குப் பிறகு ஸ்குவாஷ் போட்டிகளில் கிளாஸ்கோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தீபிகா விளையாடினார் மற்றும் ஜோஷ்னா பொன்னப்பாவுடன் கலப்பு இரட்டையர் மற்றும் பெண்கள் இரட்டையர் இரண்டையும் வென்றிகொண்டு அசத்துகிறார்.

இப்போது எல்லாவற்றிலிருந்தும் மீண்ட DK இந்தியாவுக்கான பினிஷராக தன்னை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார், RCB க்கு முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுக்கிறார். இத்தனைக்கும் கடந்த ஆண்டு முழுவதும் வர்ணனையாளர் அவதாரம் எடுத்து அங்கேயும் கலக்கியவர் .

எங்கே தனது இடத்தை இழந்தாரோ அங்கேயே வைத்து தன் கிரிக்கட் வாழ்வுக்கு விடைகொடுக்க DK ஆயத்தமாகிறார், MS க்கு பதிலாக T20 WC அணியில் ஃபினிஷராக தன்னை தேர்வு செய்யுங்கள் என தேர்வுக்குழுவுக்கு தகவல் அனுப்பிக்கொண்டிருக்கிறார்.

அடுத்து வரவுள்ள உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கு தேர்வு செய்வதற்கு தேர்வுக் குழு ஆயத்தமாகிறது என தகவல்கள் இப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன ,

உள்ளூரிலே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இடம்பெறவுள்ள T20 தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்கு தேர்வு குழு தரப்பில் இருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன .

இப்போது சிந்தியுங்கள் ?

தினேஷ் கார்த்திக் எங்கே இருக்கிறார் ,முரளி விஜய் வாழ்வுக்கு என்னவானது என்று சிந்தித்துப் பாருங்கள் !

ஒரு பெண் ஒருவன் வாழ்வை அழிக்க நினைத்தால் இன்னுமொரு பெண் அவன் வாழ்வை மீட்டு வளமாக்கிக் கொடுக்க தயாராயிருப்பாள் ❤️

வாழ்க்கை வாழ்வதற்கே ?

✍ தி. தரணிதரன்