தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமாக வாய்ப்புள்ள 3 வீரர்கள்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமாக வாய்ப்புள்ள 3 வீரர்கள்.

தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் முடிந்த பிறகு, இந்தியாவின் அடுத்த டி20 போட்டிகள் மீது கவனம் திரும்பும். இந்த ஆட்டங்கள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வண்ணம் இருக்கப்போகிறது.

ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இது சவாலான பணியாக இருக்கும். இந்தியாவின் ஐபிஎல் 2022 ல் சிறப்பித்த வீரர்களில் சிலர் அந்த தொடரில் அறிமுகமாகலாம்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஐ தொடரில் அறிமுகமாகக்கூடிய மூன்று வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

1) உம்ரான் மாலிக்

ஜம்மு & காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஐபிஎல் 2022  தற்போது, ​​எட்டு ஆட்டங்களில், உம்ரான் சராசரியாக 15.93  பந்துகளுக்கு ஒருதடவை விக்கட் வீழ்த்துவதோடு ஓவருக்கு சராசரியாக 7.96 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் T20 WC திட்டமிடப்பட்டிருப்பதால், உம்ரான் அங்கு பயனுள்ளதாக இருப்பார் என்பதால், அவரை முதலில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியாவில் முயற்சிக்கலாம்.

2) அர்ஷ்தீப் சிங்.

​​அர்ஷ்தீப் மிகவும் பவர்பிளேயிலும் சிறப்பாக செயல்படுகிறார். ஐபிஎல் 2022க்கான அவரது Economy இதுவரை 7.70 ஆக இருந்தது.

Death over போது அவர் பெரும்பாலும் பந்து வீசுவது ஆச்சரியமாக இருக்கிறது. எனவே, டெத்-ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் டி நடராஜன் மற்றும் ஹர்ஷல் படேல் போன்றவர்கள் அவரை விட முன்னால் இருந்தாலும், அவரது சேவைகளை இந்தியா முயற்சி செய்யலாம்.

3) ராகுல் திரிபாதி

இதுவரை 8 ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 228 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 45.60 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 174 என்று ஈர்க்கக்கூடியத்தாக உள்ளது.

சில பெரிய வீர்ர்களுக்கு ஓய்வு கொடுத்தால், ராகுல் திரிபாதி களம் இறங்குவதை பார்க்கலாம்.