பயிற்சியாளர் தேர்வு குறித்து வெளிப்படையாக பேசிய கங்குலி

பயிற்சியாளர் தேர்வு குறித்து வெளிப்படையாக பேசிய கங்குலி

பயிற்சியாளர் தேர்வு குறித்து கங்குலி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

புத்திசாலித்தனமான பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டும் என டுவிட் போட்டதும், அது கம்பீருக்கு எதிராக என்று அனைவராலும் சொல்லப்பட்டது.

ஆனால் பேட்டி ஒன்றில், “இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு, உணர்ச்சிகரமானவரும், நேர்மையானவருமான கம்பீர் சிறந்தவர் என்று கூறியிருக்கிறார்.

கூடவே ஐபிஎல் அணிகளை நிர்வகிப்பது என்பது வேறு, இந்தியா போன்ற பெரிய அணிகளை நிர்வகிப்பது வேறு என்பது கம்பீருக்கு தெரியும்.

விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற அவரது சக ஆட்டக்காரர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்” என பேசியிருக்கிறார்.

கவுதம் கம்பீரை சர்வதேச அணிக்கு அழைத்து வந்து வாய்ப்பு கொடுத்தவர் அன்று இந்திய அணியின் கேப்டனாக இருந்த இதே சவுரவ் சந்திதாஸ் கங்குலி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#GautamGambhir #SouravGanguly #TeamIndia #Cricket