பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இது தான் காரணம் -கேப்டன் பாபர் அசாம்.

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இது தான் காரணம் என குறிப்பிட்டு பேசியிருக்கிறார் அதன் கேப்டன் பாபர் அசாம்.

ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவிய பிறகு பரிசளிப்பு நிகழ்வு பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில்,

“இந்த போட்டியில் தோல்வியைப் பெறுவோம் என சற்றும் நினைத்திருக்கவில்லை. ஏனெனில் முதலில் பேட் செய்து தேவையான ரன்களை அடித்திருந்தோம் என எண்ணுகிறேன்.

இருப்பினும் மைதானத்தில் செய்த ஒரு சில தவறுகளால் இந்த போட்டியில் தோல்வியை ஏற்க வேண்டிய சூழல் வந்துள்ளது. குறிப்பாக இன்றைய போட்டியில் கேட்சை தவறவிட்டது மிகப்பெரிய தவறாக அமைந்திருக்கிறது.

இந்த தொடர் முழுவதும் வீரர்கள் ஒன்றாக செயல்பட்டு தங்களது முழு பங்களிப்பை அளித்தனர். ஒரு கேப்டனாக எனக்கு இந்த தொடர் மனநிறைவாக உணரவைக்கிறது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினாலும் ஒருசில தவறுகள் மிகப்பெரிய இழப்பை கொடுத்துவிடும் என நாங்கள் கற்றுக்கொண்டோம்.

இந்த தவறிலிருந்து சரிசெய்து கொண்டு அடுத்தடுத்த தொடர்களை நிச்சயம் வெல்ல முயல்வோம். குறிப்பாக நாங்கள் விளையாடிய போட்டிகளில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மிகப்பெரிய பக்கபலமாகவும் பெருமிதமாகவும் இருந்தது என்பதை நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.” என்றார்.

#ABDH