பூட்டானை வென்று வரலாறு படைத்தது இலங்கை..!

இலங்கை கால்பந்து அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2-0 என்ற கோல் கணக்கில் பூட்டானை வீழ்த்தி 3 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச வெற்றியைப் பெற்றது.

கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெற்ற ஃபிஃபா தொடர் உதைபந்தாட்டப் போட்டியின் போது இது இடம்பெற்றுள்ளது.

உலக தரவரிசையில் பூட்டான் 184வது இடத்திலும், இலங்கை அணி தரவரிசையில் 204வது இடத்திலும் உள்ளன.

இந்த போட்டியை காண கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு 6000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

இந்த போட்டிக்கு பிறகு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஃபசல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.