மஹிந்த இருப்பது எங்கே – பாதுகாப்பு செயலாளர் ஊடகங்களுக்கு விளக்கம்…!

பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார்” என்றும் பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறினார்.