மும்பையுடன் போட்டியில் குதித்த சென்னை, குஜராத்திடம் மண் கௌவியது…!

ஐபிஎல் 2022: மில்லர், ரஷித் கான் அதிரடியில் சிஎஸ்கேவை வீழ்த்தியது குஜராத் டைட்டன்!

ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆடவில்லை. எனவே ரஷீத் கான் அணியை வழிநடத்தினார். பாண்டியாவிற்கு பதிலாக அல்ஸாரி ஜோசஃப் சேர்க்கப்பட்டார். அணியின் பேலன்ஸை மனதில் வைத்து மேத்யூ வேட் நீக்கப்பட்டு ரிதிமான் சஹா சேர்க்கப்பட்டார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 3 ரன்னிலும், மொயின் அலி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடிசேர்ந்த அம்பாதி ராயுடு சிறப்பாக பேட்டிங் ஆடி 46 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், 48 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

பின்வரிசையில் ஜடேஜாவும் துபேவும் இணைந்து ஓரளவிற்கு அடித்து ஆடி டீசண்ட்டாக முடித்தனர். ஜடேஜா 12 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 169 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 170 ரன்கள் என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸூக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர், அபினவ் மனோகர் ஆகியோரும் சோற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த விருத்திமான் சஹா – டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதில் 11 ரன்களைச் சேர்த்திருந்த சஹா ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மில்லர் 28 பந்துகளில் அரைசதம் கடந்து மிராட்டினார். அவருடன் இணைந்த ரஷித் கானும் தனது பங்கிற்கு சிக்சர், பவுண்டரி என விளாசி சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை மிரளவைத்தார்.

அதிலும் கிறிஸ் ஜோர்டன் வீசிய 18ஆவது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர், ஒரு பவுண்டரி என விளாசி ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதன்பின் 40 ரன்கள் எடுத்திருந்த ரஷித் கான், டுவைன் பிராவோ ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. சிஎஸ்கே தரப்பில் கடைசி ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசினார்.

அதனை எதிர்கொண்ட டேவிட் மில்லர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன் மூலம் 19.5 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 94 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

#Abdh