வரலாறு படைத்தது இலங்கை மகளிர் அணி..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது.

டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் சாமரி அத்தபத்து 73 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.