14 இலங்கை கிரிக்கட் வீரர்கள் தனிமைப்படுத்தலில் – தொடரும் சிக்கல்…!

சினமன் கிராண்ட் ஹோட்டலில் உயிர் குமிழியில் (Bio Bubble) இருந்த 14 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இன்று முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கோவிட் -19 க்கு பரிசோதனையை அடுத்து கடுமையான தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதற்கான மாற்று இலங்கை அணியாக இந்த அணி தயார்படுத்தப்பட்டது.

ஏனெனில் சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து நாட்டுக்கு திரும்பியதும் இரண்டு பயிற்சி ஊழியர்கள் கோவிட்டுக்கு சாதகமாக சோதனை செய்த பின்னர் தேசிய அணி தனிமைப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து இந்த குழுவில் இருந்த சந்துன் வீரக்கொடி கொரோனா தொற்றுக்கு உள்ளானார். இதனை அடுத்தே குறித்த வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

14 வீரர்கள்

ஏஞ்சலோ பெரேரா

அசேல குணரத்ன

ஆஷன் பிரியஞ்சன்

பானுகா ராஜபக்ஷ

சத்துரங்க டி சில்வா

மகேல உடவத்த

ரோஷென் சில்வா

மிலிந்த சிறிவர்தன

பிரபாத் ஜெயசூரியா

ஜெஃப்ரி வாண்டர்சே

லஹிரு மதுசங்க

டில்ஷன் முனவீர

மலிந்த புஷ்பகுமாரா

லஹிரு கமகே