பில்லியர்ட்ஸ் போட்டி- 8வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி

19வது ஆசிய பில்லியட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி பில்லியர்ட்ஸ் வீரரான பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

19வது ஆசிய பில்லியட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதிச்சுற்று கட்டார் தலைநகர் டோஹா நகரில் நேற்று இடம்பெற்றது.

இதன்படி, இந்தியாவின் மற்றொரு வீரரான துருவ் சித்வாலாவை தோற்கடித்து பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

இதன்மூலம் 8வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி.

அவர் இதுவரை சர்வதேச அளவிலான போட்டிகளில் 40 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.