2 வது போட்டியில் இன்று 8 மணிக்கு களமிறங்கும் இந்திய C அணி, சாம்சனுக்கு தலைமைத்துவம்..!

2 வது போட்டியில் இன்று 8 மணிக்கு களமிறங்கும் இந்திய C அணி, சாம்சனுக்கு தலைமைத்துவம்..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரர் குருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று இடம்பெறவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டு இன்றைய நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாண்டியாவுடன் நேரடித் தொடர்பில் இருந்த 8 பேர் அடுத்துவரும் 2 போட்டிகளிலும் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியா சகோதரர்கள் இது மாத்திரமல்லாமல் சூரியகுமார் யாதவ் ,இஷன் கிஷன் ,பிரித்வி ஷா, தெவுதுட் படிக்கல் ,கிருஷணப்பா கௌதம் ஆகிய வீரர்கள் நேரடி தொடர்பு கொண்டிருந்ததாகவும் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

இப்போதைய நிலையில் பிந்திக்கிடைக்கும் தகவல்படி அணித்தலைவர் தவானும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், அவரும் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்றும் சஞ்சு சாம்சன் தலைவராக செயல்படுவார் என்றும் அறியவருகின்றது.

இதனால் டுவிட்டர் வாசிகள் இந்த அணியை இந்திய C அணி என அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

 

Previous articleபந்துவீச்சு தரநிலையில் 2 ம் இடத்தில் ஹசரங்க..!
Next articleஇந்திய அணியில் திடீரென 5 வர் குழாமுக்குள் இணைப்பு- தமிழக வீரர் சாய் கிஷோரும் அணியில்..!