அடம்பிடிக்கும் க்ராண்ட் பிளவர்- அவதிப்படும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்..!

அடம்பிடிக்கும் க்ராண்ட் பிளவர்- அவதிப்படும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்..!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவர் பைசர் தடுப்பூசியை தவிர வேறு தடுப்பூசியை பயன்படுத்தமாட்டேன் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனையவர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசியை பயன்படுத்தியுள்ளனர் ஆனால் கிரான்ட் பிளவர் அதனை பயன்படுத்த மறுத்துவிட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொகான் சில்வா தெரிவித்துள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட Pfizer தடுப்பூசியை பயன்படுத்தினால் மாத்திரமே நான் எனது நாட்டிற்கு செல்ல முடியும்.

சீன, ரஸ்ய மருந்துகளை இதன் காரணமாக என்னால் பயன்படுத்த முடியாது என கிரான்ட் பிளவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு பைசர் தடுப்பூசிவழங்கப்படும் என மொகான் சில்வா தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் இதுவும் ஒரு தலையிடிதான்.