தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியது இந்தியா – அசத்தல் வெற்றி..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

ருத்ராஜ் கெய்க்வாட் 57 , இஷான் கிஷன் 54  ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 31 ரன் எடுத்தார். இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

இந்திய பவுலர்கள் முதலிரண்டு போட்டிகளிலும் அடைந்த தோல்வியையடுத்து கட்டுக்கோப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

கேப்டன் பவுமா 8 ரன், ஹென்ரிக்ஸ் 23 ரன், பிரிடோரியஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர். வான் டெர் டுசன் ஒரு ரன்னில் வெளியேறினார்.

கடந்த போட்டியில் அதிரடி நிகழ்த்திய கிளாசன் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதுடன் இரு போட்டிகள் மீதமுள்ள நலையில் தென் ஆபிரிக்கா தொடரில் 2-1 என முன்னிலையில் காணப்படுகிறது .

இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், சஹல் 3 , அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

 

 

 

Previous articleவெள்ளி பதக்கம் வென்றது இலங்கை அணி..!
Next articleஇலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி- மக்ஸ்வெல் வாணவேடிக்கை..!